அம்பாறை சிறிவள்ளிபுரம் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்.

அம்பாறை மாவட்டம் சிறிவள்ளிபுரம் கிராமத்தில் உள்ள வறிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும், உலர் உணவுப் பொருட்களும் வழங்கும் இடம்பெற்து.

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிப்பரா சக்தி சித்தர்பீடம் கல்வி, சமூகநலம், பண்பாடு அறப்பணி மையத்தின் ஊடாக ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சுமார் 75 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

இதற்கான நிதி பங்களிப்பினை சக்தி சோமாஸ்கந்தர குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து கோமாரி என்னும் பிரதேசத்தில் வாழும் 35 வறிய குடும்பங்களுக்கும் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன் இதற்கான நிதி பங்களிப்பினை லண்டனில் வசிக்கும் சக்தி கமலேஸ்வரன் கலா குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வானது அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் சக்தி திரு நவீன் தலைமையில் அவரது செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து நடாத்தியுள்ளனர்.

இந் நிகழ்ச்சி திட்டத்திற்கான அனுசரணையை லண்டன் ஆதிபராசக்தி அம்மா காப்பகத்தின் பொறுப்பாளர் விஜயா வரதன் சுவிஸ் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் தலைவர் சக்தி திரு சுவீஸ் சுரேஷ் ஆகியோர் வழங்கினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews