ஆலையடிவேம்பில் நேர்த்தியான முறையில் எரிபொருள் விநியோகம்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியுஆர் கோர்ட் மற்றும் வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நேர்த்தியான முறையில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் உத்தியோகத்தர்களின் கியுஆர் பரிசோதனை உதவியுடன் அக்கரைப்பற்று பொலிசாரின் ஒத்துழைப்போடு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஊழியர்களால் பெற்றோல் விநியோகம் சீரான முறையில் வழங்கப்பட்டது.

கியுஆர் கோர்ட் நடைமுறை வெற்றியளித்துள்ளதுடன் இதன்; மூலம் முறைகேடுகள் இன்றி பெற்றோல் விநியோகம் இடம்பெறவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பனங்காடு இராசமணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை அமைதியான முறையில் பெற்றோல் விநியோகம் ஆரம்பமானதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் கூட்டுறவுசங்க ஆணையாளரின் அறிவறுத்தலுக்கு அமைய ஜெனரேட்டர் வசதியுடன் மக்கள் நலன் கருதி பெற்றோல் வழங்க எரிபொருள் நிரப்பு நிலைய நிருவாகம் நடவடிக்கை எடுத்தது.

இதேநேரம் பெண்களுக்கும் மதகுருமாருக்கும் ஒருவரிசைஎனவும் பெற்றோல் வழங்கப்பட்டதைஅவதானிக்கமுடிந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews