மரபுரிமை சின்னங்களான சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பான ஆராயவுக் கூட்டம் .

யாழ்பாணம் மரவுரிமை மையத்தின் ஏற்பாட்டில்  நல்லூர் இராசதானி மரபுரிமை சின்னங்களான சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பான ஆராயவுக் கூட்டம்
நேற்றைய தினம் (07.08.2021) யாழ்ப்பாணம் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில்தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைத்துவரப்பட்டே குறித்த அராய்வுக் கூட்டம் இடம் பெறறது.
விரைவில் இவற்றிற்கான கட்டட வரைபடங்கள் (architectural drawings) தயாரிக்கப்பட்டு வெளிவிடுவதற்கும் முடிவு செய்யப்பட்டள்ளதுடன் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு தாம் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ் உணர்வாளர்கள் அனைவரினதும் பங்களிப்பை எதிர்பார்த்துள்ளதாகவும்  யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் கோரிக்கை விடுத்துள்ளது
இதில் அதன் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம், செயலாளரான மருத்துவ பீட பதிவாளர் ரமேஷ், மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன், புனர்நிர்மாண அலுவலர் கபிலன், மாநகர சபை உறுப்பினர்களான பார்த்திபன், தனுயன் மற்றும் கண்டியில் இருந்து வருகை தந்த பட்டய கட்டட கலைஞர் ஹேரத், அளவையியலாளர் (quantity surveyor) சரத் சத் குமார, தொல்லியலாளர் மைத்திரிபால, மூத்த புனர்நிர்மாண அலுவலர்களான (senior conservation officers) பண்டாரநாயக்க, மெத்தானந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews