பதவி விலகாத கோட்டாபயவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சபாநாயகர் அதிரடி நடவடிக்கை –

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் ஜனாதிபதி தனது பதவி விலகல் கடிதத்தை நள்ளிரவுக்கு முன்னர் கையளிப்பதாக அறிவித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் கிடைக்கப்பெறாவிட்டால், அவர் பதவியை விட்டு விலகியதாக கருதி மேற்கொள்ளவுள்ள சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தனது பதவி விலகல் கடிதத்தை இன்னமும் சமர்ப்பிக்காத நிலையில், நாளை நாடாளுமன்றம் கூடுமா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதென நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews