வைத்தியரை காணவில்லை..! பல மணிநேரம் காத்திருந்து வீடு திரும்பிய கர்ப்பவதிகள்,….!

யாழ்.உரும்பிராய் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் வைத்தியர் வருகைக்காக காத்திருந்த கர்ப்பவதி பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் கர்ப்பவதிகளை பார்வையிடும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு 40க்கும் மேற்பட்ட கர்ப்பவதிகள் வருகைதந்துள்ளனர். ஆனால் அவர்கள் வெகு நேரமாக காத்திருந்த நிலையிலும் பார்வையிடுவதற்காக வைத்தியர் வரவில்லை.

தற்போதைய பொருளாதாரம் நெருக்கடியில் கர்ப்பவாதிகள் பலர் முச்சக்கர வண்டிக்கு பணம் கொடுத்தும் குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த நிலையில் அங்கு வைத்தியர் இல்லாமை தமக்கு மிகுந்த அசௌகரியம் என கூறியுள்ளனர்.

குறித்த விடையம் தொடர்பில் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு வினவியிருந்தோம்.

இதன்போது குறித்த வைத்திய சாலையில் சுழற்சி முறையில் வைத்தியர் ஒருவர் பார்வையிடுவதாகவும் வைத்தியர் வராமை தொடர்பில் தான் ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews