திருக்கோவில் பிரதேசத்தில் 13ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு.

 திருக்கோவில் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 13வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கஞ்சி வழங்கி ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் நினைவுப் பேரூரை என்பன இன்று இடம்பெற்றன.

திருக்கோவில் பிரதேச பொது மக்களின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் பிரதான வீதியில் இன்று நண்பகல் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டிய பிரார்த்தனைகள் மற்றும் நினைவுப் பேரூரைகள் இடம்பெற்றதுடன்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன், காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கே.ஜெயசிறில் திருக்கோவில் பிரதேசசபை உறுப்பினர்களான கே.காந்தரூபன், வீ.ஜெயச்சந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் ரீ.கலையரசனின் செயலாளர் கண்ணதாசன், கட்சி ஆதரவாளர்கள் திருக்கோவில் பிரதேச இளைஞர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews