மட்டு.காத்தான்குடியில் சமுர்த்தி முன்னேற்ற மீளாய்வு கூட்டம்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுர்த்தி வேலைத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ் சில்மியா,பிரதேச செயலக சமூர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ்,முகாமைத்துவ பணிப்பாளர் என்.எஸ் மஜீட் திட்ட முகாமையாளர் சுபந்தினி கண்ணன் வலய முகாமையாளர்கள் இசட்.பஹ்மி.முகப்பில் உட்பட களத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,வலய உதவியாளர்கள் கலந்து கொண்டனர்

இதன்போது கடந்த நான்கு மாதங்களில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில மேற்கொள்ளப்பட்ட சமூர்த்தி வேலைத்தட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக களத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பித்ததுடன் வீட்டுத் தோட்ட பசுமைப் புரட்சி வேலை திட்டம் தொடர்பான முன்னேற்றம் குறித்த கலந்துரையாடப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews