நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள செய்தி..!

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி அமைதியின்மை மற்றும் துன்பத்தை கொண்டு வந்திருக்கின்றது. ஆனாலும் இந்த நெருக்கடி நிலையானது மோசமடைவதற்கு முன் எல்லாம் சரியாகவிடும். 

மேற்கண்டவாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது,

நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்யப்படும். மேலும் நிதி உதவிக்காக உலகின் பல நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்த அவர், நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் குறிப்பிட்டார்

Recommended For You

About the Author: Editor Elukainews