மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரை கைது செய்யுமாறு CIDக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல்..!

கொழும்பில் அரசுக்கு எதிரான அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை கைது செய்யுமாறு சி.ஐ.டி.யினருக்கு உத்தரவிடக்கோரி சட்டத்தரணி ஒருவர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்று (13) முறைப்பாடொன்றினை செய்துள்ளார்.

சட்டத்தரணி சேனக பெரேராவே 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ் தனிப்பட்ட மனுவாக ( ப்ரிவடெ ப்லைன்ட்) இதனை இவ்வாறு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிசாந்த பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன, மொறட்டுவை நகர சபை தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், 

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன ஆகியோரை கைதுசெய்ய உத்தரவிடுமாறு கோரியே இம்முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews