எரிபொருளுக்கான வரிசை மீண்டும் அதிகரிப்பு.

அண்மைய நாட்களாக மக்கள் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பது அதிகரித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, நகர மண்டபப் பகுதி, பஞ்சிகாவத்தை, கொட்டஞ்சேனை, பொரளை மற்றும் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, எலக்கந்த உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

குறிப்பாக கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 300 க்கும் மேற்பட்டோர் நீண்டவரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

வாகனங்களுக்கான வரிசை குறைந்திருந்தாலும் மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் அதிகாலை முதல் மாலை வரை காத்திருக்கின்றனர்.

எரிவாயு விலை அதிகரிப்பு, எரிவாயுக்கான தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மண்ணெண்ணெய்க்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews