இன்று தொடக்கம் 145 ரூபாய்க்கு அரிசி பெற்றுக் கொள்ள முடியும்..! வர்த்தக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு.. |

இன்று தொடக்கம் 145 ரூபாய்க்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக மக்கள் அரிசி பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி இவ்வாறு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாவாக்கு சதொச ஊடக பெற்றுக் கொள்ள முடியும் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் கொள்வனது செய்ய முடியும்.

ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் என வர்த்தக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews