யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டப்பாடு உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளவிய ரீதியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

போதனா வைத்தியசாலையில் 73 அத்தியாவசிய மருந்துகள், சத்திர சிகிச்சைக்கு தேவையான 13 மருந்துகள்,

அவசரமாக தேவைப்படும் 53 வீதமான மருந்துகள் மற்றும் ஆய்வு கூடத்திற்கு தேவையான 6 மருந்துகள் என்பன இல்லாது உள்ளதாகவும்,

வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews