புதுவருடத்தை முன்னிட்டு பொன்னாலை வெண்கரம் மாணவர்களுக்கு நிதியுதவி!

தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களும் மாணவர்களும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மேற்படி நிதியுதவி செய்யப்பட்டது.

மேற்படி நண்பர்களின் நிதி (50,000) வெண்கரம் படிப்பகத்தில்வைத்து மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன், வெண்கரம் செயற்பாட்டாளர் ந.பொன்ராசா, பொன்னாலை மேற்கு ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத் தலைவர், பொன்னாலை தெற்கு ஸ்ரீ கிருஷ்ணன் சனசமூக நிலைய தலைவர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கும் உதவி வருகின்றார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews