பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து எந்தவித குற்றச்சாட்டுக்களையும் சுமத்தாதவர்களை விடுதலை செய்யுமாறு கோரும் பிரேரணை சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றம்….!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் பலர் தடுத்து வைக்கப் பட்டுள்ளார்கள்.

அவர்களை உரிய தரப்பினர் பிணையிலோ, அல்லது விடுதலை செய்யுமாறு கோரும் பிரேரணையை சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் நேற்று முன்தினம்  சமர்ப்பித்துள்ள நிலையில் குறித்த பிரேரணையை நிறைவேற்ற சபையின் முழுமையான ஆதரவையும் கோரியுள்ளதுடன் அத் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் குறித்த பிரேரணையில் குறிப்பிட்டுள்ளநிலையில் குறித்த பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews