எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் வரிசையில் நிற்கவேண்டாம்! இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மக்களுக்கு அறிவிப்பு.. |

நாட்டில் டீசல் கையிருப்பில் இல்லாமையினால் இன்றும், நாளையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக வரிசையில் நிற்கவேண்டாம். என இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

37,500 மெட்ரிக் டன் டீசலை ஏற்றிச் வந்த கப்பலிலிருந்து திட்டமிட்டபடி நேற்று எரிபொருளை தரையிறக்க முடியவில்லை. எனவே, மார்ச் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்

வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் CEYPETCO கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு டீசல் தொடர்ந்து வழங்கப்படும் என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews