கடத்தப்பட்ட இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்..!

யாழ்.புத்துார் – நவக்கிரி பகுதியில் வீடு புகுந்த இனந்தொியாத வன்முறை கும்பலினால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளைஞன் வீட்டின் அருகில் கை, கால்கள் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் சிகிச்சைகளுக்காக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அச்சுவேலி பொலிஸார் கூறியிரக்கின்றனர்.

அருந்தவராசா சயந்தன் என்ற 30 வயது இளைஞன் கடந்த சனிக்கிழமை இரவு இனந்தொியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக பெற்றோர் அச்சுவேலி பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியிருக்கின்றனர்.

இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்நிலையில் இரண்டு நாள்களின் பின்னர் இளைஞர் கைகள் கட்டப்பட்ட நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டார்.

சிகிச்சையின் பின்னர் இளைஞரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews