உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணை முன்னெடுப்பு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் எடுக்கப்பட்ட குறித்த வழக்கு விசாரணையில் சந்தேக நபர்களில் 4 பேர் நீதிமன்றின் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது இவர்களுக்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடைபெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் 63 நபர்களும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews