முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் பிரதேச செயலாளர் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட தேறாங்கண்டல் கிராமத்தில் அமந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு 225000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப்பொருட்களும், 75000 ரூபா நிதியும் நேற்று வழங்கப்பட்டுள்ளன.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/03/IMG-20220306-WA0019-300x225.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/03/IMG-20220306-WA0020-300x225.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/03/IMG-20220306-WA0021-300x225.jpg)
தேறாங்கண்டல் கிராமத்தில் அமந்துள்ள ஶ்ரீ அதிசய முருகன் ஆலயத்தில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் இயக்குநர் மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.
அவர்களுடன் துணுக்காய் பிரதேச சபை உப தவிசாளர்-த.சிவகுமாரன், சமூக செயற்பாட்டாளர் தயாபரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.