இலங்கை முதலுதவி சங்கத்தால் கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு…..!

இலங்கை முதல் உதவிச்சங்கம், மற்றும்  இந்துசமயத்தொண்டர் சபையினரால் முழங்காவில் இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத்தொண்டர் சபை உறுப்பினர் பா.ஹம்சனின்  அனுசரணையில்யா/கொடிகாமம் அரசினர் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி  வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபர்  ப.தர்மபூவதி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத்தொண்டர் சபை தேசிய ஆணையாளர் சிவத்திரு வை.மோகனதாஸ்,  அமைப்பின் தேசியகண்காணிப்பாளர்  வை.ஜெகதாஸ் மற்று ம் ஆசிரியர்கள்,  கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இதில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin