பளை பிரதேசத்தில் கவனிப்பார் அற்று காணப்படும் கரந்தாய் சுகாதார அலுவலகம்!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரந்தாய் கிராமத்தில் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிராம மக்கள் நலனுக்காக திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் குறித்த கட்டிடம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரையில் இயங்கு நிலைஅற்றே காணப்படுகிறது.குறித்த அலுவலக வேலைகள் அனைத்தும் கரந்தாய் கிராமத்தில் உள்ள முன்பள்ளியில்இயங்கி வருகிறது.குறித்த சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் காடு வளர்ந்து கவனிப்பார் அற்று காணப்படுகிறது.குறித்த கட்டடத்தில் சுகாதார பணிகளை செய்யுமாறும் முன்பள்ளிக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்றும் கிராம மக்கள் தெரிவித்திருந்தும் இதுவரையில் எதுவித நடடிக்கையும் எடுக்கப்படவில்லை என கவலை விடுத்துள்ளனர்.
ஆகவே சுகாதார வைத்திய அதிகாரி அவர்களே முன்பள்ளி மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் உங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தை விரைந்து சுத்தப்படுத்தி அலுவலக்த்தை மாற்றுமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin