பூநகரி நோக்கி பயணித்த பொலிஸார் விபத்தில் சிக்கினர்! ஒருவர் பலி, மேலும் ஒருவர் படுகாயம்.. |

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்க்கு  அருகில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலையே  இவ் விபத்து  இடம்பெற்றுள்ளது. இச்  சம்பவத்தில் திருகோணமலை –  காந்திபுரத்தை சேர்ந்த பொலிஸ் காவலர்  கணேசரட்ணம் ஹரிகரன் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்துள்ளார். மன்னாரில் பணி புரியும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணி நிமித்தம் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து  மன்னார் நோக்கி திரும்பும்வேளை பூநகரி – சங்குப்பிட்டி பாலம் கடந்து சற்று தொலைவில், இராணுவ சோதனை சாவடிக்கு அருகில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்தது வீதியோர கட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

அதில் இருவரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மற்றையவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews