சுற்றுலா சென்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்ட கணவனும் மனைவியும்! பொலிஸார் தீவிர விசாரணை.. |

சுற்றுலா சென்ற இடத்தில் கணவனும், மனைவியும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று நுவரெலியா மாவட்டம் களுகேலே பகுதியில் உள்ள விடுதியில் இடம்பெற்றுள்ளது.

குருநாகல், கொகரெல்ல பிரதேசத்தில் இருந்து குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்த தம்பதியினர் நேற்று முன்தினம் (26) நள்ளிரவு வரை பார்பிக்யூ பார்ட்டியில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் கடும் குளிர் நிலவியதால், தம்பதியினர் தங்களுடைய அறைக்குள் “பார்பிக்யூ” அடுப்பை எடுத்துச் சென்றது பின்னர் தெரியவந்தது.

இந்நிலையில் 58 வயதான பெண்ணும், 59 வயதான ஆணும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  நேற்று காலை அவர்கள் எழுந்திருக்காத காரணத்தினால் குடும்பத்தினர் அறையைத் திறந்து பார்த்தபோது இருவரும் படுக்கையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் எடுத்துச் செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews