நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமுலாகும் சாத்தியம்..! நாளை உயர்மட்ட கூட்டத்தில் ஆய்வு.. |

நாடு முழுவதும் கொரோனா பரவல் அபாயம் அதிகரித்துள்ளதுடன், தொற்றாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது.

இந்நிலையில் புதிய சுகாதார கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முடக்கத்திற்கு செல்லாமல் சுகாதார கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்குவது குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காகச் சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக

தகவல்கள் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews