13 பெண்கள் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று..! ஒரு மரணமும் பதிவு, வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்.. |

வடமாகாணத்தில் 13 பெண்கள் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் 117 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் – 15 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் – 02 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் – 02 பேர்(உயிரிழந்த முதியவர் உட்பட)தனியார் வைத்தியசாலையில் – ஒருவர்,அதேபோல் யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 48 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில்

08 பேருக்கு (யாழ்.போதனா வைத்தியசாலை) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெண்கள் 13 பேர் உட்பட 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது

Recommended For You

About the Author: Editor Elukainews