மாமனாரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மருமகன் தப்பி ஓடி தலைமறைவு..!

திருமண வைபவத்தில் மாமனாரை கழுத்தறுத்து கொலை செய்த மருமகன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

கழுத்து அறுக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெபருவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 54 வயதுடைய லுணுகம்வெஹெர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருமண வைபவத்தின்போது

குடும்பத்தாருக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது , கொலை செய்யப்பட்ட நபரின் மூத்த மகளின் கணவனால் இவ்வாறு கொலை நடந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ள போதிலும் , அவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலை மறைவாகியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews