மிஸ்ட் ஹோல்’ காதலால் யாழ் வடமராட்சியில்18 வயது யுவதி கூட்டு பாலியல் வன்புணர்வு!

தவறுதலான தொலைபேசி அழைப்பின் மூலம் அதாவது மிஸ்ட் ஹோல் ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற, 18 வயது யுவதியை, யாழ்ப்பாணத்தில், நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர், யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட யுவதி, நேற்று, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
தொலைபேசிக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன், குறித்த யுவதிக்கு நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காத நிலையில், காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று. குறித்த இளைஞன், யுவதியை திருமணம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறும், இதன் போது, வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து வருமாறும் கூறியுள்ளார்.
இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பிய யுவதி, தன்னுடைய சங்கிலி உள்ளிட்ட சொற்ப நகைகளையும், 40 ஆயிரம் ரூபா பணத்தையும் எடுத்துக்கொண்டு, நேற்று காலை, இளைஞன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு நின்றிருந்த இளைஞன், யுவதியை, தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, ஐஸ்கிறீம் கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு, இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு, ஐஸ் கிறீம் குடித்த பின்னர், காலை 10.00 மணியளவில், இளைஞன், அந்த யுவதியை, தன்னுடைய தாய்க்கு அறிமுகம் செய்து வைப்பதாக, வடமராட்சி திக்கம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு ஆள் நடமாற்றம் அற்ற பகுதிக்கு, யுவதியை அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி, உறவு கொண்டுள்ளார்.
பின்னர், தண்ணீர் வாங்கி வருவதாக கூறி, அவ்விடத்தில் யுவதியை தனியே விட்டு விட்டு சென்றுள்ளார்.
இளைஞன் சென்று சில நிமிடங்களில், மூன்று இளைஞர்கள் அவ்விடத்திற்கு சென்று, யுவதியை பலாத்காரமாக வன்புணர்ந்து உள்ளனர்.
பின்னர், யுவதியை அழைத்து சென்ற இளைஞனும், அவ்விடத்திற்கு சென்று, நான்கு பேருமாக, யுவதியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதன் பின்னர், யுவதியிடம் இருந்த 40 ஆயிரம் ரூபா பணம், நகைகள், தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்த பின்னர், யுவதியை அழைத்து வந்த இளைஞன், யுவதியை மட்டும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, யுவதியின் கிராமத்திற்கு அருகில் வீதியில் இறக்கி விட்டு தலைமுறைவாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், நெல்லியடி பொலிஸ் நிலையத்தில், யுவதியினால் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனையடுத்து, சம்பவம் இடம்பெற்ற பகுதி, பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதனால், முறைப்பாட்டை, நெல்லியடி பொலிஸார், பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பில், பருத்தித்துறை பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், துன்னாலை பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க முயன்ற போது, நான்கு பேரும், நேற்று முதல் தலைமறைவாகியுள்ளமை, பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
அதனால், நான்கு இளைஞர்கள் மீதும், பொலிஸாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை, பொலிஸார் துரிதப்படுத்தியுள்னர்.
இதேவேளை, கடந்த வருடம், யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த யுவதியை ஒருவரை, முகநூல் ஊடாக அறிமுகமான இளைஞன், அந்த யுவதியை காதலிப்பதாக கூறி, முள்ளிப் பகுதிக்கு அழைத்துச் சென்ற நிலையில், சில இளைஞர்கள் இணைந்து, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews