20 வயதான இளைஞனை காணவில்லை! பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு.. |

கொழும்பிலிருந்து வீட்டுக்கு திரும்பிய இளைஞன் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களாக கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த நிலையில் கடந்த 6ம் திகதி வீட்டுக்கு செல்வதாக வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் கூறிவிட்டு கொழும்பிலிருந்து வவுனியா நாகரிலுப்பை குளம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டிருக்கின்றார்.

எனினும் அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் கடந்தும் குறித்த இளைஞர் வீட்டிற்கும் வரவில்லை. இதனையடுத்து அவரது தாயாரால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாலுசுந்தரம் சுதர்சன் வயது 20 என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள்

0767700438 குறித்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி தெரியப்படுத்தியுமாறு அவர்களது குடும்பத்தினரால் கோரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews