அரச பேரூந்துக்கு பின்னால் வந்து மோதிய மோட்டார் சைக்கிள்!

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி சந்தி பகுதியில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேரூந்து  தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்திய போது பின்னால்  வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து பேரூந்தில் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவரை  பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews