நாயை அடகு வைத்த இருவர் கைது!

பலாங்கொடை பிரதேசத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாயை திருடிச்சென்று 7,500 ரூபாவுக்கு அடகு வைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பலாங்கொடை – கிரிமெட்டிதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது உயர் ரக வகையைச் சேர்ந்த குறித்த நாய் கண்டுபிடிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews