நாளை வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு…!

தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நாளையதினம்(01)  கல்முனை பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களின் வியாபாரா நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எதிர்வரும் மே 01ம் திகதி 2024ல் எமது பொதுச் சந்தையிலுள்ள... Read more »

பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்படவுள்ள ஆபத்து…!

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை  சீர்செய்யாதுவிடின், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பமும் இருக்காது என  யாழ் பல்கலைக் கழக அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற  தந்தை செல்வாவின் 47ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் ... Read more »

இலங்கையில் சடுதியாக உயர்ந்த தேசிக்காயின் விலை…!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு கிலோ தேசிக்காய் 1000 ரூபா முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அங்குள்ள... Read more »

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் சரிவு…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வர்த்தக வங்கிகளில் இன்றையதினம்(30)  மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனடிப்படையில், செலான் வங்கியில்-  அமெரிக்க டாலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 290.50 முதல் ரூ. 291.25 மற்றும் ரூ. 301 முதல் ரூ. முறையே 301.75. மக்கள்... Read more »

பிரித்தானிய உயர்ஸ்தானிகர்- சாணக்கியன் எம்.பி திடீர் சந்திப்பு…!

பிரித்தானிய  உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை சந்தித்துள்ளார். நேற்றையதினம் (29) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள போதே அவர் குறித்த சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் மேலும் தெரிவிக்கையில், குறித்த சந்திப்பின் போது  இதன்போது மாவட்ட மற்றும்... Read more »

நாட்டில் இன்று பலத்த காற்றுடன் கனமழை

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்... Read more »

பொது வேட்பாளரா? பகிஷ்கரிப்பா? ஆராய்ந்து சரியானதை முடிவெடுக்க வேண்டும்…!பேராசிரியர் ரகுராம். (வீடியோ)

ஜனாதிபதி தேர்தலில்  பொது வேட்பாளரா? அல்லது பகிஷ்கரிப்பு என விஞ்ஞான ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக ஆராய்து எது மிக சரியானது என முடிவெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர், பகிஷ்கரிப்பு இரண்டும் ஒரு... Read more »

மாமுனை கடற்பகுதியில் இருவர் கடற்படையால் கைது

வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்  வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட  சுற்றிவளைப்பில் இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான கடற்றொழிலான இலை, குழைகளை கடலில் இட்டி கணவாய் மீனை பிடிப்பதற்க்காக இலைகுழைகளை படகில்  ஏற்றிச்சென்ற  இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனரஸ.... Read more »

வாகனம் கேட்டு 150 எம்பிக்கள் சபாநாயகருக்கு கடிதம்

சுங்கவரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை அடுத்த தேர்தலுக்கு முன்னர் வழங்குமாறு கோரி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் இளைய... Read more »

யாழ் வருகிறார் எரிக் சொல்ஹெய்ம்..!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய சர்வதேச காலநிலை ஆலோசகரும் முன்னாள்  நோர்வே வெளி விவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நோர்வே நாடாளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு ஆகியோர் நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார். யாழ்ப்பாணம் அல்லப்பிட்டியில் அமைந்துள்ள தப்ரபேன் நிறுவனத்தின்... Read more »