கப்புதூவில் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு…!

நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட. கரவெட்டி,  கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை(27)   உயிரிழந்துள்ளார்.  இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (வயது- 65) என்பவராவார். மேற்படி நபர்  பாதுகாப்பற்ற வயல் கிணற்றில்... Read more »

வடக்கு கடலை விற்பனை செய்வதற்க்கும், இந்திய றோளர் அனுமதிக்கும் அண்ணாமலை கண்டனம்……!

வடமாகாண கடலோடிகள் இணைய பேச்சாளரும் அதன் இணைப்பாளருமான காத்தலிங்கம் அண்ணாமலை நேற்று வரடமராட்சியிலுள்ள தனது அலுவலகத்தில்  நடாத்திய ஊடக சந்திப்பு(வீடியோ) Read more »

ரணில் விக்ரமசிங்க பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது – சிறிதரன்

ரணில் விக்ரமசிங்கதன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

இயற்கை விவசாய அறிமுக நிகழ்வும், மதிப்பளிப்பு நிகழ்வும் கிளிநொச்சயில் இடமபெற்றது.

இயற்கை விவசாய அறிமுக நிகழ்வும், மதிப்பளிப்பு நிகழ்வும் இன்று கிளிநொச்சயில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று காலை கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது. ஈழத்து எழுத்தாளர் வன்னியூர் ரஜீவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஆர்... Read more »

அம்பாறை சொறிகல்முனையில் 13 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள  சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சோந் 13 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக சிறுவனின் தந்தையார் இன்று திங்கட்கிழமை (26) முறைப்பாடு செய்துள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர். வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவனின் தாயாரும் சொறிகல்முனையைச் சேர்ந்த தந்தையாரும்... Read more »

அம்பாறை தம்பிலுவிலில் வங்கியின் பாதுகாவலராக கடமையாற்றும் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்பு !!

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதேசத்தில் வீடு ஒன்றில் வங்கியில்  பாதுகாவலராக கடமையாற்றிவரும் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் தம்பிலுவில் வீ.சி வீதியைச் சோந்த 2 பிள்ளைகளின் தந்தையான 58... Read more »

100 ஏக்கர் காணியை முஸ்லிம் மக்களிற்கு பகிர்ந்தளிக்க எடுக்கும் முயற்சி தமிழ் முஸ்லிம் உறவை உடைக்கும் ரணிலின் முயற்சி – சிறிதரன் தெரிவிப்பு

100 ஏக்கர் காணியை முஸ்லிம் மக்களிற்கு பகிர்ந்தளிக்க எடுக்கும் முயற்சி தமிழ் முஸ்லிம் உறவை உடைக்கும் ரணிலின் முயற்சி  என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி தமிழரசு கட்சி அலுவலகத்தில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்... Read more »

இத்தாலியில் படகு விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் படகு விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த சுமார் 40 குடியேற்றக்காரர்கள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு இத்தாலிய கடலோர நகரமான குரோடோன் கடல் பகுதியில் வைத்தே இந்த சம்பவம் இன்று (26.02.2023) நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் 28 பேர் உயிரிழந்தமை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.... Read more »

வெடிப்புச் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

மொரட்டுவை கல்தேமுல்ல பிரதேசத்தில் குப்பைக்கு தீமூட்டுவதற்காக சென்ற போது திடீரென ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில், தம்பதியினர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குப்பியொன்றே இவ்வாறு வெடித்துள்ளது என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு... Read more »

பிரதமர் பதவி விலகப்போவதாக கூறும் செய்தியில் உண்மை இல்லை- பிரதமர் அலுவலகம்

பிரதமர் தினேஸ் குணவர்தன பதவி விலகப்போவதாகக் கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பிரதமரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமரை பதவி விலகுமாறு எந்தக் கட்சியும் அழுத்தம் கொடுக்கவில்லை... Read more »