அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை..! அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம்

இலங்கை அரச அதிகாரிகள் மீதான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், 1905 என்ற இலக்கம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த இலக்கத்திற்கு... Read more »

வெளிநாட்டில் கப்பலில் சிக்கிய இலங்கையர்கள் – அதிகாரிகள் தீவிர விசாரணை

மசகு எண்ணெய் திருடப்பட்டதாகக் கூறி ஈக்குவடோரியல் கினியாவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பணியாளர்கள் அடங்கிய கப்பலின் நடவடிக்கைகள் குறித்து நைஜீரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெரோக் இடுன் (Hunter Idun) என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் எட்டு இலங்கை பணியாளர்கள் இருப்பதாக தகவல்கள்... Read more »

கடமை நேரத்தில் கைது செய்யப்பட்ட தொடருந்து ஊழியர்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று வந்து கொண்டிருந்த இரவு நேர தபால் தொடருந்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மது போதையில் இருந்த நிலையில் அனுராதபுரம் தொடருந்து பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். தொடருந்தின் பிரதான கட்டுப்பாட்டாளர்,அனுராதபுரம் தொடருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அறிவித்ததை அடுத்து,... Read more »

எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எரிவாயு விநியோகம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாசாங்கு செய்யும் நோக்கில் சிலர் எரிவாயு இருப்புக்களை மறைத்து செயற்படுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். மூன்று... Read more »

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களை சந்தித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், கடற்தொழில் நீரியவள அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார். புதுமாத்தளன் மீனவர்கள் சங்கம், கொக்குத்தொடுவாய், அளம்பில், முல்லைத்தீவு ஆகிய மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். மீனவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருக்கு... Read more »

ஒரு மில்லியன் ரூபாவுக்கும் மேல் கொள்ளை சம்பவம்- இளம் யுவதி கைது

அளுத்கமை தர்கா நகரில் உள்ள சிறிய சிறப்பு அங்காடியில் காசாளராக தொழில் புரிந்து வந்த  யுவதி சுமார் 12 லட்சம் ரூபா பணத்தை மோசடியான முறையில் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக சிறப்பு அங்காடியின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய நடத்திய... Read more »

மாணவர்கள் மீது கொடூரமாக தாக்கிய அதிபர்

களுத்துறை மில்லனிய பிரதேச பாடசாலை ஒன்றில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை தாக்கி கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மில்லனிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு... Read more »

வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு இரு குழுக்களுக்கிடையே மோதல் 50 பேர் தப்பி ஓட்டம் பொலிசர் உட்பட 10 பேர் காயம்

வெலிகந்தை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே  நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) ஏற்பட்ட மோதலையடுத்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதுடன் பொலிசார்  இராணுவத்தினர் உட்பட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தப்பி ஓடிய 35 பேர் சரணடைந்துள்ளதாகவும்... Read more »

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க திட்டம்

எதிர்வரும் 15 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான நிறுவன வரிகள் மற்றும் சுங்க வரிகளை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவன வரி அதிகரிப்பு சதவீதம் குறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் தற்போது கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அதிவேக நெடுஞ்சாலையில் வசூலிக்கப்படும்... Read more »

நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன நல்லிணக்கத்திற்கான பன்முனை வேலைத்திட்டத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை ஒன்றிணைக்க நாடாளுமன்றக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில்  பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... Read more »