வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு இரு குழுக்களுக்கிடையே மோதல் 50 பேர் தப்பி ஓட்டம் பொலிசர் உட்பட 10 பேர் காயம்

வெலிகந்தை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே  நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) ஏற்பட்ட மோதலையடுத்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதுடன் பொலிசார்  இராணுவத்தினர் உட்பட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தப்பி ஓடிய 35 பேர் சரணடைந்துள்ளதாகவும் ஏனையவர்களை இராணுவத்தினர் பொலிசார் இணைந்து தேடிவருவதாக  பொலிஸ் உயர் அதிகாரி ஒருவார் தெரிவித்தார்.
பொலன்னறுவை மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை தடுத்துவைத்து இராணுவத்தினர் புனர்வாழ்வழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சபவதினமான நேற்று இரவு 10 மணியளவில் காலி பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருபவரை மாதம்பை பகுதியைச் சேர்ந்த ஒருவர் தலையில் தாக்கியதையடுத்து காலி மாத்தறையானை தாக்குவதாக காலி மாத்தறையைச் சேர்ந்த ஒருவர் குரல் கொடுத்ததையடுத்து காலி மாத்தையைச் சேர்ந்த குழுவினருக்கும் மாதேம்ih பகுதியைச் சேர்ந்த குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது
இதனையடுத்து அங்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டிற்கு கோண்டுவர  வெலிகந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையல் சென்ற பொலிசாரை தாக்கியதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, இரு பொலிசார் ஒரு இராணுவத்தினர் மற்றும் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதனை தொடர்ந்து அங்கிருந்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ள நிலையில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலை இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் தப்பி ஓடிய கைதிகளை தேடியவரும் நிலையில் இன்று காலை வரையில் தப்பிஓடிய 35 கைதிகள் சரணடைந்ததுடன் ஏனைவர்களை தேடி இராணுவத்தினரும் பொலிசாரும் மதுறு ஓயா காட்டுப்பகுதியில் தேடுதல்களை நடாத்தி வருகின்றதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து வேலியை உடைத்து சுமார் 600 மேற்பட்டோர் தப்பிச் சென்ற நிலையில் அவர்கள் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பித்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews