முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களை சந்தித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், கடற்தொழில் நீரியவள அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார். புதுமாத்தளன் மீனவர்கள் சங்கம், கொக்குத்தொடுவாய், அளம்பில், முல்லைத்தீவு ஆகிய மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். மீனவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர். இதன்போது இரண்டே முக்கால் இஞ்சி கண் வலையை தொழிலுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கும் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், முல்லைத்தீவு நீரியவள பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews