கிளிநொச்சி கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்தில் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த பகிரதன் சுமன் 21 வயதுடைய இளைஞரே விநாயகபுரம் கந்தன் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் சடலத்தினை மீட்கப்பட்டு,... Read more »

இரகசிய ஆவணங்களை பாதுகாக்கும் சிறப்புப் பை: ரணிலிடம் கையளித்த இலங்கை இராணுவம்

ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லக்கூடிய சர்வதேச தரத்தினாலான சிறப்புப் பை (Attaché Case) இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகேயினால் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியியலாளர்களால் இந்த... Read more »

அமைச்சுக்களின் செயலாளர்கள் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு உதவி செய்யாத அமைச்சுக்களின் செயலாளர்கள் பலருக்கு ஜனவரி மாதமளவில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான செயலாளர்களின் பெயர்ப் பட்டியலை ஜனாதிபதி செயலாளரிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களைப் பணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வரவு... Read more »

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான தகவல்கள் 2 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலமாகவே அல்லது மின்னஞ்சல்... Read more »

வங்கிக் கணக்குகளில் காணாமல் போகும் பணம்; பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

சிறிலங்காவில் பொது மக்களின் வங்கிக்கணக்குளை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உட்பட எட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

2022 க்கான உயர்தர பரீட்சை – கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவித்தல்

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால், அக்காலப்பகுதியில் மின் துண்டிப்பு மற்றும் மின் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அவர் நேற்று (01) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில்... Read more »

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியீடு

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி ( Z-Score ) இன்று மாலை வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் admission.ugc.ac.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தமது வெட்டுப்புள்ளியை தெரிந்துக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக... Read more »

டிசம்பர் மாதத்திற்கான ஐ.நா பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பு இந்தியா வசம்

ஐக்கிய நாடுகள் சபையின், பாதுகாப்புச் சபை தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் 2021 மற்றும் 2022 ஆகிய 2 வருடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் பாதுகாப்புச் சபையின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில்... Read more »

நாடு பெரும் மின்சார நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ளது என எச்சரிக்கை!

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை தயாராகி வருகிறது. இந்நிலையில், பெரும் மின்சார நெருக்கடியை நாடு எதிர்கொள்ளவுள்ளது என பல தரப்பினரும் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலே இதற்கு காரணம்... Read more »

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு..! வெளியான புதிய தகவல்

அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு ஏதும் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்று... Read more »