சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நாளான இன்று விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது

சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நாளான இன்று விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான பணியில் ஈடுபடும் பணியாளர்களை கௌரவப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போட்டியில், ஆர்வத்தடன்... Read more »

எமது போராட்டத்தினை நசுக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டு

எமது போராட்டத்தினை நசுக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டுகின்றனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகரங்சினி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குற்றம் சாட்டினார்... Read more »

கடற்படையினராலும் அவர்களிற்கு காணியினை அளவீடு செய்து வழங்குவதாலும் கிராமத்தில் தொழில் புரிவோர் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் – அன்னராசா தெரிவித்துள்ளார்

கடற்படையினராலும் அவர்களிற்கு காணியினை அளவீடு செய்து வழங்குவதாலும் கிராமத்தில் தொழில் புரிவோர் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதுடன் எதிர்காலத்தில் நங்கூரமிடும் துறைமுகங்கள் போன்றவற்றை அமைக்கவும் இடையூறாக அமையுமென கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாரத்தனை தம்பாட்டி கடற்படையினரிற்கு... Read more »

இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது!

இன்றைய தினம் இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய எல்லைக்குள் உள் நுழைந்ததால் இந்திய கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் குரு நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

அத்தியாவசிய பொருட்கள் உட்பட இறக்குமதி பொருட்கள் தொடர்பான தகவல்

அத்தியாவசிய பொருட்கள் உட்பட இறக்குமதி பொருட்களின் மொத்த விலை தற்போது பத்து சதவீதம் அளவில் வீழ்ச்சி கண்டிருப்பதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு இணைவாக ரூபாவின் பெறுமதி ஸ்திரத்திரமடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும். எனினும் பொருட்களின் மொத்த விலை குறைந்துள்ள போதிலும்... Read more »

இலங்கையை பொறிக்குள் தள்ளியுள்ள சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியது கடனல்ல, பொறி என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் இலங்கை விரைவில் வீதியில் விழும் எனவும் அவர் குறிப்பிட்டார். வங்கிகளில் கடன்... Read more »

சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆளும் கட்சியில் இணைய வாய்ப்பு

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர். நாடாளுமன்றம் இன்றைய தினம் 9.30க்கு கூட உள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக நடைபெறும் இறுதி நாடாளுமன்ற அமர்வு இதுவாகும். அண்மைய நாட்களாக... Read more »

கிளிநொச்சியில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் 91 குடுப்பங்களைச் சேர்ந்த 301 பேர் பாதிப்பு – மாவட்ட செயலகம் அறிவிப்பு

கிளிநொச்சியில் நேற்று(02) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளை ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 91 குடுப்பங்களைச் சேர்ந்த 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் 12.00மணிக்கு பெறப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கரைச்சி மற்றும்... Read more »

கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் கலந்துகொண்ட, போதைப்பொருள் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி

“விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வார்” என்ற தொனிப்பொருளிலான போதைப்பொருள் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி இன்றைய தினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் திருமதி வதனி தில்லைச்செல்வன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலாநிதி, செஞ்சொற்செல்வர் ஆறு... Read more »

கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு

கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை வளாகத்திலும், பாடசாலைக்கு முன்பாகவும் நேற்றைய தினம் முறிந்து விழுந்த மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டது. மேலும், ஆபத்தானதாக அடையாளம் காணப்பட்ட... Read more »