கொக்குவிலில் 17 வயது மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கொக்குவிலில் 17 வயது மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கொக்குவில்  இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்ற (17 வயது) மாணவனே மின்னழுத்தியினை மின்பிறப்பாக்கியுடன் இணைக்க முற்பட்ட  வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக... Read more »

யாழ் நகரில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிசாரினால் விசேட வேலை திட்டம் முன்னெடுப்பு!

யாழ் நகரில் வாகன நெரிசலை குறைக்கும் முகமாக பொலிசாரினால் விசேட வேலை திட்டம்  முன்னெடுப்பு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ் நகரில்  பொருட்களை கொள்வனவு செய்யும் முகமாக பொதுமக்களின் நடமாட்டம் அதிக ளவில் காணப்படுவதோடு நகரப் பகுதியில் வாகனங்களினை நிறுத்துவதனால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளமையினைகட்டுப்படுத்தும்... Read more »

பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடிக்கு லொறியில் மாடுகளை கடத்திச் சென்ற ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது 6 எருமை மாடுகள் மீட்பு !!

பொலன்னறுவை கிரித்தலை பிரதேசத்தில் இருந்து காத்தான்னுடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக லொறி ஒன்றில் எருமை மாடுகளை கடத்திச் சென்ற ஒருவரை காத்தான்குடி கடற்கரை வீதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (6) அதிகாலை மாவட்ட குற்ற விசாரணப் பிரிவினர் கைது செய்ததுடன் 6 எருமை மாடுகள் லொறி... Read more »

ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த திரு திருமதி கடம்பன் தம்பதிகளுக்கு கௌரவம்…..!

ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த திரு திருமதி  கடம்பன் தம்பதிகளுக்கு அகொல இலங்கை சைவ மகாசபை  கௌரவமளித்துள்ளது. பங்குனி உத்திர நன்னாளான நேற்று  மீள 4வது,  5வது குழந்தை பெற்றெடுக்கும் தமிழில் பெயர் வைக்கும் குடும்பங்களை ஊக்கப்படுத்தும் செயற்றிட்டத்தை  சைவ மகா சபை சைவ அறப்பணி... Read more »

ஆபத்தான நிலையில் திருவையாறு வில்சன் வீதி பாலம்! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

கிளிநொச்சி – திருவையாறு வில்சன் வீதியில் மூன்றாம் பகுதியில் உள்ள சரவனாஸ் பாலத்தின் அத்திபாரம் இடிந்துவிழும் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. திருவையாறு பிரதேச மக்கள் நாளாந்த நடவடிக்கைகளுக்காக குறித்த பாலத்தினையே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இரணைமடு குளத்தின் இடது கரை பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில்... Read more »

போதைப்பொருளுடன் சிக்கிய காவல்துறை உத்தியோகத்தர்

களுத்துறை காவல்துறை பயிற்சி கல்லூரியின் கான்ஸ்டபிள் ஒருவரை போதைப்பொருளுடன் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கிடைத்த தகவலையடுத்து அவசரகாலப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்... Read more »

நாவலர் மண்டப விவகாரம் – ரிட் மனுத்தாக்கல் செய்ய இந்து கலாச்சார திணைக்களம் நடவடிக்கை

நாவலர் மண்டபத்தில் இருந்து யாழ். மாநகர சபை வெளியேறுவதற்கு யாழ். மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் இந்து கலாச்சார திணைக்களம் “ரிட்” மனுத் தாக்கல் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ். மாநகர சபையை நாவலர் மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்புரை... Read more »

தனது உடலுறுப்புகளை தானம் செய்து பலரை வாழவைக்கும் மாணவன்!

மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் உடல் உறுப்புகள் அவரது குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற தானம் செய்யப்பட்டுள்ளன. குருநாகல் மலியதேவ கல்லூரியின் உயர்தர மாணவரான பிரவீன் பண்டார, தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் பயணித்தபோது விபத்தில் சிக்கி வைத்தியசாலையில்... Read more »

தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையை சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறார் வீரசேகர

தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையை சிங்கள மக்களிடம் மறைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முயல்கிறார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் மக்கள்... Read more »

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாயாகவும் விற்பனை விலை 330.50 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. இதன்போது நேற்று டொலரின் கொள்முதல்... Read more »