கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றைய தினம் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பெண் கடந்த 09/05/2023 நித்திரைக்கு சென்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தார் நேற்று காலை... Read more »
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கு நிகழ்வு தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலும் இன்று வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னதாக சன்னதி ஆலயத்தில் ஆத்மா சாந்தி பூசை வழிபாடுகள் இடம் பெற்றன.... Read more »
திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் திருகோணமலை நெல்சன் திரையங்கிற்கு முன்பாக பௌத்தமயமாக்கல் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்களில்... Read more »
வட மாகாண பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்களின் விபரங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகத் தமக்கு அனுப்பி வைக்குமாறு வடமாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த, யாழ். மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அவர் அனுப்பி வைத்த... Read more »
சாவகச்சேரி பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை தனியார் ஒருவரிடம் இருந்து மீட்டு மக்களின் பாவனைக்கு வழங்குமாறு அக்கிராம மக்கள் சாவகச்சேரி பிரதேச சபை தலைமைக்காரியலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 6.00 மணி முதல் பிரதேச சபையின் பிரதான வாயிலை மறித்து அவ்வீதியை... Read more »
கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Skills Expo கண்காட்சி 2023 கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இன்று ஆரம்பமானது. இக்கண்காட்சியில் பங்கெடுக்க அங்கஜன் இராமநாதனின் ஒருங்கமைப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 750 மாணவ மாணவியர் பங்கேற்றனர். நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்... Read more »
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கேஸ்வரரின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆலயத்தில் பூசை... Read more »
இனப் படுகொலை வராத்தை நினைவு கொள்ளும் வகையில் இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியிலும் உப்பு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் இ.முரளிதரன் தலமையில், முன்னணி உறுப்பினர்கள், பிரதேச பிரதேச மக்கள்... Read more »
ஆசியாவின் முதலாவது மாநாட்டு மண்டபமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்ட 50 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.! ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆசிய... Read more »
இந்திரவிழா வரலாற்றில் மட்டுமல்ல, இலங்கையிலே இதுவரையில் எந்தவொரு மின்னமைப்பினாலும் கட்டமைக்கப்படாத, இந்து தெய்வங்களின் உருவங்களை மிகவும் பிரமாண்டமாக மின்னலங்காரங்களால் கட்டமைத்து வரலாற்றுச்சாதனை இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை இந்திரவிழாவில் இது இடம்பெற்றது. இந்திரவிழாவிலே அனைத்து மக்களையும் கவர்ந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று இந்திரவிழாவை புதியதொரு பரிணாம வளர்ச்சிக்கு... Read more »