புலிகளின் தலைவரின் வீரச்சாவை அறிவித்தவர்கள் மீது பொன் சுதன் சீற்றம்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரச்சாவை அறிவித்தவர்கள் இறுதி போரில் மக்களை சுட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்களே என  பொன் சுதன் தெரிவித்துள்ளார் நேற்று  (10) வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் வைத்தே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார் தொடர்ந்தும்... Read more »

கொக்குவில் பகுதியில் வாள்வெட்டினை மேற்கொண்ட சந்தேகநபர்கள் கைது!

கடந்த 3திகதி கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகாமை இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவருடைய கைவிரல் வெட்டி விழுத்தப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு கைவிரல் பொருத்தப்பட்டது. இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்... Read more »

யாழில் இளைஞன் மீது தாக்குதல்!

வட்டு வடக்கு, சித்தங்கேணி ஜே/158 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் இளைஞர் மீது 09.03.2025 அன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் கருத்து தெரிவிக்கையில், கடந்த மார்ச் மாதம்... Read more »

கிளி. சந்தை கடைத் தொகுதி விவகாரம் ஒத்திவைக்கப்பட வேண்டும். – ஈ.பி.டி.பி. கோரிக்கை!

கிளிநொச்சி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள    கடைத் தொகுதி விவகாரம், கரைச்சி பிரதேச சபைக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வரையில் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், செயலாளர் நாயகம்... Read more »

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது?” மகளிர் தினத்தில் தமிழ் தாய்மார்கள் கேள்வி  

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு நீதி கோரி இலங்கையில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கின் தாய்மார்கள், தமது அன்புக்குரியவர்களின் தலைவிதி வெளிப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளனர். இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்களுக்கு நீதி கோரி... Read more »

மனைப்பொருளியல் டிப்ளோமா கண்காட்சி   கட்டைக்காட்டில் 

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமாட்சி கிழக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படும் மனைப்பொருளியல் டிப்ளோமா கண்காட்சி இன்று   (12) கட்டைக்காட்டில் இடம்பெற்றது வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு  மரியாள் மண்டபத்தில் முற்பகல் 09.30 மணியளவில் மருதங்கேணி பிரதேச செயலகத்தின்... Read more »

தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடலாம் : நண்பர்களை வரவேற்கிறேன் – மனோ எம்பி தெரிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  தமிழரசு கட்சி நண்பர்கள் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். தமிழரசு கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பில்  போட்டியிடுவது... Read more »

சீ.வி.கே. சிவஞானத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் சம்பந்தமான சீ.வி.கே. சிவஞானத்தின் கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பதில் கடிதம் ஒன்றை சீ.வி.கே.சிவஞானத்திற்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் இணைந்து செயலாற்றுவது சம்பந்தமாக  தங்களுடைய விருப்பத்தை அதில்... Read more »

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை

கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் வேகமாகப் பரவி பன்றி வளர்ப்புப் பண்ணைகளில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திய ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி – பளை மற்றும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த 5 பன்றிப்பண்ணைகளிலும் பரவி பன்றிகளில் பலத்த... Read more »

நாகர்கோவில் கிழக்கு கலைமகள் முன்பள்ளி சிறார்களது சிறுவர் சந்தை

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு கலைமகள் முன்பள்ளி சிறார்களது 2025ஆம் ஆண்டுக்கான சுயதொழில்  சந்தை இன்று(6) இடம்பெற்றது. முன்பள்ளி முதன்மை ஆசிரியர் தலைமையில் இன்று காலை மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது குறித்த சந்தையில் சிறார்கள் தமது வீட்டுத் தோட்டத்தில் விழைந்த காய்கறிகள்,தேங்காய், கீரை... Read more »