இலங்கை மக்களுக்கு மற்றுமொரு தலையிடி – அதிகரிக்கும் விலை!

எதிர்வரும் வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கம் மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்தாவிட்டால் இந்த நிலை ஏற்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »

சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு.

ரஷ்யா உடனடியாக உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இராணுவப் பிரிவுகள் அல்லது அதன் ஆதரவு படைகளில் உள்ளவர்கள், எந்த இராணுவ நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும்... Read more »

உக்ரைன் அதிரடி! – ரஷ்ய படையின் மற்றுமொரு மூத்த அதிகாரி கொலை.!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யாவின் நான்காவது மூத்த இராணுவ ஜெனரல் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் ஜனாதிபதியை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இராணுவ ஜெனரல் குறித்த தகவல்களை எதுவும் வெளியாகவில்லை.... Read more »

அமெரிக்கா காங்கிரஸில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி!

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியுள்ள உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி அமெரிக்க காங்கிரஸில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். மெய்நிகர் உரையாக இது இடம்பெற்றது. இந்த உரையின் பெரும்பகுதி உக்ரேனிய மொழியில் அமைந்திருந்தது. எனினும் இறுதிப்பகுதியில், வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைனுக்கு ஆங்கிலத்தில்... Read more »

பிள்ளைகளுடன் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்ட தமிழ் பெண்! – அவுஸ்திரேலியாவில் சம்பவம்…!

அவுஸ்திரேலியாவில் தனது பிள்ளைளுடன் தாய் ஒருவர் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். காருக்குள்ளிருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி... Read more »

பொது மக்கள் இருந்த கட்டிடத்தில் குண்டு வீசியது ரஷ்யா! – 1200 பேரின் நிலை என்ன?

உக்ரைனில் மரியுபோல் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் மீது ரஷ்யப் படைகள் குண்டுவீசித் தாக்கியுள்ளதாக நகரத்தின் துணை மேயர் தெரிவித்துள்ளார். 1,000 முதல் 1,200 பேர் வரை கட்டிடத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை எனவும் அவர்... Read more »

பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு அழிப்பு…!

பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு முற்றுகையிட்டு அழிக்கப்பட்டுள்ளது. தருமபுரம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே நேற்று (15.03.2022)  சுற்றிவளைத்து... Read more »

சாந்தபுரம் கலைமகள் வித்தியாலாய புதிய இரு மாடி வகுப்பறை கட்டிடம் திறந்துவைப்பு…!

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் 29 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இரு மாடி  வகுப்பறை கட்டிடம் நேற்று  (15-03-2022) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழுள்ள  சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்குரிய  புதிய இருமாடி வகுப்பறை கட்டிடம் 2019ம் ஆண்டின்  ... Read more »

தென்னை பயிர் செய்கை சபையினால் இன்று மானியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன…..!

தென்னை பயிர் செய்கை சபையினரால் இன்று கரவெட்டி, புலோலி, அம்பன், ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தெங்கு பயிர்செய்கையில் ஈடுபடும் 115 பயனாளிகளுக்கு இன்று மானியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தென்னை பயிர்செய்கை பிராந்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.ரவிமயூரன் தலமையில் காலை 10:00 மணிக்கு கரவெட்டி... Read more »

அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் கௌரவிப்பு….!

கணபதி அறக்கட்டளை நிறுவனத்தால்  இன்றைய தினம் அதன் அமரத்துவமடைந்த பணிப்பாளர் வைரவநாதன் யசோதரன் பிறந்த நாள் நினைவாக- யா/அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவித்து ஊக்குவிக்கப்பபட்டுள்ளன. கணபதி அறக்கட்டளை நிர்வாகி  கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் நிதிப்பங்களிப்பில் ... Read more »