யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் முன்பாக போராட்டம்…!

யாழ் பல் கலைக்கழக கிளிநொச்சி வளாகம் முன்பாக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று மாலை 5.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்கலைக்கழக வீதி ஊடாக A9 வீதியை... Read more »

பிரதமர் பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை! பிரதமர் அலுவலகம் மறுப்பு.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தியை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள நிலையில்,அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரதமர் மஹிந்த... Read more »

கோட்டாபய அரசுக்கு எதிராக போராட்டத்தில் மிருகங்கள்! வைரல் புகைப்படங்கள்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், நாட்டிலுள்ள மக்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ள வளர்ப்பு மிருகங்களும் ஒழுங்கான உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளன. இதனை எடுத்துக் காட்டும் முகமாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள்... Read more »

வட்டக்கச்சி மத்திய கல்லூரியில் திறன் வகுப்பறை சிறீதரன் எம்.பியினால் திறந்து வைப்பு.

வட்டக்கச்சி மத்திய கல்லூரியில் திறன் வகுப்பறைத்தொகுதியினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த திறன் வகுப்பறைகளுக்கான நிதி அனுசரணையை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தொழிலதிபர் திருஞானசம்பந்தர் கஜலோகன் , கோகுலன் பாமினி ,... Read more »

கிளிநொச்சியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படும் அதேவேளை, எரிபொருள் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசை…!

கிளிநொச்சியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படும் அதேவேளை, எரிபொருள் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையும் காணப்படுகின்றது. வைத்தியசாலை சேவை உட்பட அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன், பொது போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை Read more »

பளையில் இராணுவ கண்காணிப்பில் ஊரடங்கு!

நேற்றைய தினம் (02) மாலை 6.00மணியில் இருந்து திங்கள் காலை 6.00மணி வரை குறித்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து இன்றைய  காலையில் இருந்து சமூக வலைத்தளங்களும் மாலை வரை  முடக்கப்பட்டிருந்தது. தென்  இலங்கையில் ஐனாதிபதிக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்... Read more »

திறந்து மூடப்பட்ட யாழ்.கலாச்சார மையம் ? ஆய்வாளர் நிலாந்தன்..!

கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பைப் பொருத்தவரை... Read more »

ஊரடங்கு நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்புகளுக்கு தடை விதிப்பு.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு எதுவும் நடத்த முடியாது என்று யாழில் பொலிஸார் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த அலுவலகத்திற்குச் செய்தியாளர்கள் சென்ற வேளை,... Read more »

அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட பேராதனை பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்.

ஊரடங்கு உத்தரவை மீறிப் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இன்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர். பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸாரால் மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை... Read more »

வாகனங்களில் இலச்சினைகளை அகற்றிய எம்.பிக்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40க்கும் மேற்பட்டவர்கள் தமது வாகனங்களில் முன் கண்ணாடியில் காட்சிப்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இலச்சினையை அகற்றியுள்ளதாக தெரியவருகிறது. இதனை சிலர் நாடாளுமன்றத்தின் பிரதான அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை கொள்வனவு செய்ய வரிசையில் நிற்கும் மக்களிடம் இருந்து ஏதேனும்... Read more »