உக்ரைனில் பிடிபட்ட இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்

ரஷ்ய இராணுவத்தின் பிடியில் இருந்து உக்ரைன் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட ஏழு இலங்கையருக்கும் நாடு திரும்ப விருப்பமில்லை என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அழைத்துச் செல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஏழு பேரும்... Read more »

செவ்வாய்க்கிழமைக்கான மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமைக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை பொது பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி இன்றையதினம் ஒரு மணி 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது. மூன்று வலயங்களில் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

அமைச்சர் டக்ளஸ் அளித்த உறுதிமொழி!

தமிழக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வடபகுதியைச் சேர்ந்த அனைத்து இளைஞர்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 69 தமிழ் இளைஞர்களின் உறவினர்கள் குழுவுடன் இடம்பெற்ற... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே கால அவகாசம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், 10 மில்லியன் ரூபாய் நீர் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று... Read more »

அரசாங்கம் நெல்லை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முன்வர வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

புத்தளம்- எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் பாரிய சவாலுக்கு மத்தியில் விவசாயத்தை மேற்கொண்டதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இம்முறை 600 ஏக்கர் பரப்பில் சிறுபோகம் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஒரு ஏக்கருக்கான விதை நெல் 8000 ரூபாவிற்கும் ஒரு ஏக்கருக்கான உரம் மூடை 8000... Read more »

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கருத்து

போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய... Read more »

பிரித்தானியாவில் இந்து ஆலயம் மீது தாக்குதல் – 46 பேர் வரையில் கைது

பிரித்தானியாவின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட்... Read more »

கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கோரிய 100 நாள் செயலமர்வின் 50 ம் நாள் நிகழ்வு .

கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கோரிய 100 நாள் செயலமர்வின் 50 ம் நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது. நிரந்தரமான அரசியல் தீர்வை வலுயுறுத்தி இடம்பெற்று வரும் நூறு நாள் செயற்திட்டத்தில்  50வது நாளான இன்றையதினம் கிளிநொச்சி இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதியில் போராட்டமானது ... Read more »

வீழ்ச்சியடையும் மின் உற்பத்தி!

நாட்டில் தற்போதைய நாட்களில் போதிய மழையில்லாத காரணத்தினால் நீர் இருப்பு படிப்படியாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி 85 சதவீதமாக இருந்த தண்ணீர் கையிருப்பு தற்போது 80 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக போதிய மழை பெய்ததன் காரணமாக கிட்டத்தட்ட... Read more »

மசகு எண்ணெய் கப்பலுக்கு பணம் செலுத்துவதில் தாமதம்.

பணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, மசகு எண்ணெய் தாங்கிய கப்பல், நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்தும் நங்கூரமிடப்பட்டுள்ளதாக, கனிய வள பொது சேவையாளர் சங்க தலைவர் அசோக்க ரன்வல குற்றம் சுமத்தியுள்ளார். எரிபொருள் கப்பல்களுக்கு, தாமதக் கட்டணம் அதிகளவில் செலுத்தப்படுவதன் ஊடாக, நாட்டின் டொலர்... Read more »