தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு

2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு அந்தந்த கிராம உத்தியோகத்தர்களை தொடர்புகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களைக் கோரியுள்ளது. மின்னணு பதிவேட்டில் இல்லாதவர்கள் அக்டோபர் 19ம் திகதிக்குள் கிராம நிர்வாக அலுவலர்களை சந்திக்க... Read more »

உணவு பாதுகாப்பை ஏற்படுத்த அனைத்து விளை நிலங்களிலும் பயிரிட வேண்டும்! ஜனாதிபதி வலியுறுத்து

நாட்டில் உணவு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு அனைத்து விளை நிலங்களிலும் பயிர்ச் செய்கையை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். திருகோணமலை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போதே... Read more »

வரக்காபொலவில் மண்ணிற்குள் சிக்கியிருந்த பெண் சடலமாக மீட்பு

வரக்காபொல – கும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் அதில் சிக்கியிருந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்மேடு நேற்று (14.10.2022) மாலை சரிந்து விழுந்துள்ள நிலையில், பெண்ணின் உடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர், அப்பகுதி மக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல்... Read more »

இலங்கையில் அதி சொகுசு வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை! மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

குறைந்த விலையில் வாகனம் கொள்வனவு செய்வது தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலி ஆவணங்களை தயாரித்து செஸி இலக்கங்களை மாற்றி அதி சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறான வாகனங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 70 இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு... Read more »

கிளிநொச்சி விபத்தில் இருவர் படுகாயம்…!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் பகுதியில் 14.10.2022 நேற்றைய தினம் கிளிநொச்சியில் இருந்து விவேகானந்தர் பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், விவேகானந்தர் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப்ரக வாகனமும்  முந்திச்செல்ல முற்பட்ட வேளை மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.... Read more »

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாட்டை மேற்கொள்கிறது சீனா: சிறீதரன் எம்.பி!

சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையும்,  அதனை அடைவதற்கான பகடைக்காய்களாக ஈழத் தமிழர்களையும் பயன்படுத்த நினைக்கிறது.  இனப்பிரச்சனைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணத்தை ஒரு போதும் சீனா கொண்டிருக்கவில்லை என கரைச்சி பிரதேச சபையின் பண்பாடு விழாவில் கலந்து கொண்டு... Read more »

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டவருக்கு அச்சுறுத்தல், மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு…!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும்,  இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து அவர்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  யாழ் பிராந்திய அலுவலகத்தின் கிளிநொச்சி கிளையில் முறைப்பாடு... Read more »

குடு, கஞ்சா, ஹரோயின், போதை மாத்திரை 5 பேர் கைது…!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் மற்றும் ஊரெழு முருகன் வீதி ஆகிய பகுதிகளில் கூடு கஞ்சா ஹரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் . கோபாய் பொலிஸ் நிலையப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த... Read more »

யாழில் பாரிய விபத்தையடுத்து பதற்ற நிலை – சம்பவ இடத்திலேயே இளம் குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாவாந்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை மோட்டார்... Read more »

சரி அரைவாசியாக குறைவடைந்த கோதுமை மாவின் விலை..!

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த... Read more »