யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக இரு டிப்ளோமா கற்கைநெறிகள் ஆரம்பம்

வங்கியலும், நிதியும் டிப்ளோமா மற்றும் தொழில்சார் ஆங்கில டிப்ளோமா ஆகிய இரு டிப்ளோமா கற்கைநெறிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் கீழ் நடாத்தப்படவுள்ள இரு கற்கை நெறிகளினதும் அறிமுக நிகழ்வு நேற்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்... Read more »

போதைப்பொருளுடன் பெண்னொருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெருமளவான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 42 வயதுப் பெண்ணொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில் வைத்து குறித்தபெண் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது அந்த பெண்ணிடமிருந்து 01 கிராம்... Read more »

52 அரச நிறுவனங்களினால் 8600 கோடி ரூபாய் நஷ்டம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த 420 அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வியாபார நிறுவனங்கள் 52 பெரும் நஷ்டத்தில் இயங்குவதாக நிதி அமைச்சின் சமீபத்திய அறிக்கைகள் காட்டுகின்றன. அதிக நஷ்டத்தைச் சந்திக்கும் 52 அரச நிறுவனங்களின் வருடாந்த நஷ்டம் சுமார் 8600 கோடி ரூபாய்... Read more »

மாவீரர் நாள் 2022 உணர்த்துவது? ஆய்வாளர் நிலாந்தன்

நியூஸிலாந்தில் வசிக்கும் ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர் கடந்த மாவீரர் நாளிலன்று பின்வருமாறு எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார் “இன்று மாவீரர் நிகழ்வுக்குப் போனேன்.கடந்த வருடங்களில் எனது பிள்ளைகள் வந்தனர்.இப்போது இல்லை…..எனது தம்பிக்கு  நான் மட்டும் மலர் தூவி அஞ்சலி செய்தேன்..இதை உங்களுடன் இன்று... Read more »

அரசாங்கத்தின் தீர்மானத்தினால் நாட்டு மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி

நாட்டில் தற்போதுமின்சார கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்ற செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் நாட்டின் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் இருப்பதையும்... Read more »

யாழில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு தாக்குதல்! இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோண்டாவில் மற்றும் இணுவில் பகுதியைச் சேர்ந்த... Read more »

50:50 பிறந்த கதை…! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோகணேசன் தமிழ்த் தேசிய சக்திகள் தொடர்பாகவும் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பாகவும்,; தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் சில பற்றியும் சென்றவார கட்டுரையில் ஆராய்ந்திருந்தோம். குறிப்பாக அவரது குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எழுந்த கேள்விகளையும் முதலாவது குற்றச்சாட்டான 1940களில் கண்டிய சிங்களத் தலைமைகளே தரவந்த... Read more »

கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை

கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் கெதிராக 65வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் 10... Read more »

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்!

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 2022 ஆம்... Read more »

சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி!

சுற்றுலா தொழிற்துறையை ஊக்குவிப்பதற்காக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுற்றுலா மற்றும் காணி விவகாரங்கள் தொடர்பான அமைச்சு ஆலோசனை தெரிவுக்குழு அவரது தலைமையில்... Read more »