மின்வெட்டும் இல்லை தேர்தலும் இல்லை? – ஆய்வாளர் நிலாந்தன்

கடந்த 16ஆம் திகதியிலிருந்து மின்வெட்டு நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால் மின்கட்டணம் 66 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு உணர்த்த விரும்புவது எதனை? மின்வெட்டை நிறுத்துவது என்றால் நீங்கள் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள வேண்டும். இதை அதன் பிரயோக அர்த்தத்தில் கூறின்,... Read more »

கீழ்த்தர அரசியல் வேண்டாம்: தமிழ் அரசியல்வாதிகளுக்கு நீதி அமைச்சர் எச்சரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் எவரும் அரசியல் நடத்தக்கூடாது என்று நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றோம், தமிழ் அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தில் தாக்கத்தைச் செலுத்தும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள்... Read more »

6 இலட்சம் மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்

அதிகரித்துள்ள கட்டணத்தைச் செலுத்த முடியாத 6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியின் ஆரம்பத்திலிருந்து மின்சாரம் மற்றும் நீர் கட்டணம்... Read more »

தேர்தல் நடத்தப்படாமை தொடர்பில் அனைத்துலக சமூகத்துக்கு அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் நாள் நடத்தப்படாமை தொடர்பில் அனைத்துலக சமூகத்துக்கு அறிவிக்கவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அறிவித்துள்ளன. தேர்தல் பிற்போடப்பட்டதன் காரணமாக வேட்புமனுக்களை சமர்ப்பித்த 80,000 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு... Read more »

ஜனாதிபதித் தேர்தலை நடத்த தயாராகும் ரணில் அரசாங்கம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் 31(3)(a) உறுப்புரையில், ஜனாதிபதி பதவிக்கு முதன்முறையாக நியமிக்கப்படும் ஒருவர், தான் நியமிக்கப்பட்டு 4 வருடங்களின் பின்னர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த விருப்பம் தெரிவிக்கலாம்... Read more »

கட்டைப்பிராயில் வீடுடைத்து 16 பவுண் நகை திருடியஇருவர் கைது !

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைப்பிராயில் வீடுடைத்து  16 பவுண் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ்  பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கடந்த 17 ம் திகதிகட்டைப்பிராய் இருபாலையைச்சேர்ந்த ஓய்வு... Read more »

பார ஊர்தியுடனான விபத்தில் சிக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் உயிரிழப்பு

கிளிநொச்சி புளியம்பொக்களை பகுதியில் பார ஊர்தியுடனான விபத்தில் சிக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி போலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை வெளிகண்டல் சந்திப்பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நெல்லை வீதியில் உலர... Read more »

இலங்கையில் மீண்டும் நீண்டநேர மின்தடை ஏற்படும் அபாயம்

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன குறிப்பிட்டார்.... Read more »

தமிழ் அரசியல் கைதி செ.சதீஸ்குமார் தொடர்ந்தும் சிறையிலேயே!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்ட, தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அவர் தொடர்ந்தும் சிறையிலேயே வாடுகிறார் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. சதீஸ்குமாருக்கு கடந்த முதலாம்... Read more »

13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை: முன்னாள் ஜனாதிபதி!

13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். 13ஆவது திருத்த சட்டம் அவசியம் என்று தற்போதைய அரசாங்கம்... Read more »