யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மாளிகையை ஏலம் விடுவதற்கு முயற்சி – உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் திரைமறைவில் சூழ்ச்சி…!

யாழ்ப்பாணம் வலி வடக்கில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனுடன் சூழ உள்ள தனியார் காணிகளை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க திரைமறைவில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, வலி. வடக்கு தெல்லிப்ழைப் பிரதேச... Read more »

மன்னாரில் 17 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த மூவர் அதிரடியாக கைது!

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், 17 வயதுடைய சிறுமி ஒருவரை மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கினர். இந்நிலையில் இது குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மூவரும் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பெரிய கமம் பகுதியை சேர்ந்த 23,18,17... Read more »

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாக்குதல் சம்பவம் – பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்த நபர் மீது தாக்குதல் முயற்சியை மேற்கொண்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இன்றிலிருந்து கடமை நீக்கம் செய்யப்படுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்... Read more »

தமிழ் ஈழத்திற்கான மக்கள் ஆணை கிடைத்து 46 ஆண்டுகள் தெரியாதா? வீரசேகரவுக்கு – சபா குகதாஸ்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவர்கள் அமெரிக்கா விசா கிடைக்காத நிலையில் நீதிபதி சரவணராஜா விவகாரத்திலும் ஆட்டம் கண்டு புலம்பியவர் தற்போது புதுக் கயிறு விடுவது போல தமிழர்கள் ஆயுதபலத்தால் கிடைக்காத தமிழீழத்தை பதின்மூன்றாம் திருத்தம் மூலம் பெற முட்படுகிறார்கள் என முட்டாள் தனமாக... Read more »

பண்டத்தரிப்பு ஜசிந்தா பாடசாலைக்கு முயற்சியாண்மையுடன்  கூடிய பாடசாலைத் தோட்டத்தை சிறந்த முறையில்  அமைத்தமைக்கான பாராட்டு

பண்டத்தரிப்பு ஜசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறந்த முறையில் பாடசாலைத் தோட்டம் அமைத்ததுடன் மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் விவசாய நுட்பம் தொடர்பாக அறிவூட்டல் செய்யப்பட்டது. அத்துடன் மாணவரின் போசாக்கு நிலையை ஆராய்ந்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியும் இவ்வருடம் சிறப்பான... Read more »

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றையதினம் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட... Read more »

யாழ்ப்பாணத்தில் பொழிந்த மழை – விவசாயிகள் மகிழ்ச்சியில்!

பெரும்போக நெல் விதைப்பு காலமானது ஆரம்த்த நிலையில் மழை பெய்யாமையினால் விவசாயிகள் மிகுந்த கவலையில் காணப்பட்டனர். இதனால் விதைப்புகள் பின்தள்ளப்படுமா, விளைச்சல் கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் காணப்பட்டனர். இந்நிலையில் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் விதைப்பிற்கு ஏற்ற வகையில் மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது. அந்தவகையில் தமது... Read more »

வடக்கு விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்தவும் – வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை!

வடக்கு விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர், விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் வடக்கு விவசாயிகள் கடும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவேவிவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதல் பெறுவதை இலகுபடுத்துமாறு... Read more »

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதிக் கிளையின் நிர்வாகத் தெரிவு…!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதிக் கிளையின் நிர்வாகத் தெரிவு நேற்று சனிக்கிழமை (14) மாலை நீர்வேலியில் நடைபெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ம.கபிலன் வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்று தொகுதிக் கிளைத் தலைவராக தெரிவானார். அ.பரஞ்சோதி... Read more »

விவசாய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு அடுத்த மாதம் முதல் வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இந்த வருடம் 58,770 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக செய்கை வறட்சி காரணமாக அழிவடைந்துள்ளது. இதற்கமைய... Read more »