அதிபராக தமது கடமைகளை பொறுப்பேற்பு…!

யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேற்று 04/07/2024 யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக தமது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த நிகழ்வு நேற்று 04/07/2024  யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் காலை... Read more »

ஹிருணிகாவின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு..!

  மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளார். இந்த பிணை கோரிக்கை இன்று கொழும்பு மேல்... Read more »

வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை..!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு  இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், நன்னடத்தை மற்றும்... Read more »

சம்பந்தன் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது. அதை யாரும் மறுக்க முடியாது – வீ.ஆனந்தசங்கரி.

சம்பந்தன் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது. அதை யாரும் மறுக்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்) உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு வழங்கிய இரங்கல் செய்திக் குறிபிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்து... Read more »

ரணிலுக்கு நிபந்தனை விதித்த மொட்டுக் கட்சி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தினை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.   எதிர்வரும் ஜனாதிபதித்... Read more »

சிவசேனை யாழில் செய்த செயல்…!

இலங்கை சிவசேனை சிவதொண்டர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளராக கடந்த வாரம் பொறுப்பேற்றார்.  பொறுப்பேற்ற முதற் தினத்திலேயே வலயக் கல்விப் பணிமனையில் இருந்த சைவக் கடவுள்களின் படங்களை அகற்றிய கிறிஸ்தவ கல்விப் பணிப்பாளர் திரு.பிறட்லீயை உடனடியாக யாழ்ப்பாண கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்றுமாறு... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் சித்தாத்தன் சம்மந்தன் அவர்களுக்கு இரங்கல்…!

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த சம்பந்தன் அவர்கள்,  தந்தை செல்வா அவர்கள்... Read more »

சம்மந்தன் மறைவு தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை வெற்றிடமாக்கியுள்ளது…! ஜனநாயக போராளிகள் கட்சி, இரங்கல்…!

இரா.சம்மந்தர் ஐயாவின் மறைவு தமிழ் தேசிய அரசியல் தளத்தில் தலைமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது அதனை நிரப்பிக்கொள்ள வேண்டிய காலக்கடமை தளத்தில் செயலாற்றுகின்ற அனைத்து தமிழ்தேசிய அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. அனைவரும் ஓரணியில் திரளாக ஒன்றுபடுவதே நாம் இரா சம்பந்தரின் ஆன்மாவிற்கு செய்கின்ற உண்மையான... Read more »

இராசவரோதயம் சம்பந்தன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு…!

இலங்கை. தமிழ் அரசியலில் மூத்த அரசியல்வாதியும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாளர் தலைவரும், இலங்கையினுடைய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இராசவரோதயம் சம்பந்தன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் பிற்பகல் 5 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சியின் மந்திகை மடத்தடியிலுள்ள... Read more »

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை சிதறடிக்கின்ற செயற்பாடே இந்தியா ரணிலின் கூட்டு தயாரிப்பு பொது வேட்பாளர் நாடகம் — த.தே.ம.மு தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் (video)

சுரேஸ்– இந்த நாட்டின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதற்காக இந்தியாவும் ஜனாதிபதியின் கூட்டு தயாரிப்பே இந்த பொது வேட்பாளர் நாடகம் இந்த நாடகத்தின் நடிகர்களாக தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை சிதறடிக்கின்ற செயற்பாட்டினை செய் பணத்துக்காக வந்த கதாபாத்திரங்கள் மூலம்... Read more »