மட்டக்களப்பு எல்லை வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் இன்று இடம்பெற்ற கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகி எதிர் வரும்... Read more »
இலங்கையின் கதைமாமணி எனப்போற்றப்படும் மட்டக்களப்பின் மாஸ்டர் சிவலிங்கத்திற்கு இன்று மட்டக்களப்பில் சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. தமிழரின் அடையாளமாக, தமிழ் இலக்கியத்தின் அடையாளமாகவும் மிளிர்ந்தவர் மாஸ்டர் சிவலிங்கம் மாமா. இவர் மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட மஞ்சந்தொடுவாயை பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டவர். உலகங்கெங்கும் உள்ள தமிழ் சிறார்களை... Read more »
நாட்டினுள் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் காலத்தில் கடுமையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் அனைத்து வைத்தியசாலைகளிலும் மருந்து தட்டுப்பாடு... Read more »
விசேட அதிரடிப்படையின் அரந்தலாவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அனுமதிப் பத்திரமின்றி எரிபொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிராந்துருகோட்டையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்போது 1,900 லீற்றர் டீசல் மற்றும் 19 லீற்றர் பெற்றோலை விசேட அதிரடிப்படையினர்... Read more »
லங்கா ஐஓசி நிறுவனத்திடம் இருந்து 7,500 மெட்ரிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான பணப்பரிமாற்றமும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த டீசல் இருப்புக்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. Read more »
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார். இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவை தொடர்ந்து வழங்குவதற்கு உத்தரவாதமளித்த இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. Read more »
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, கடினமான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் அறிக்கை ஒன்றில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. இதேவேளை, அதிகாரிகள் தமது... Read more »
திருகோணமலை, பேரமடு காட்டுப் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அனுமதியின்றி உள்நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நால்வரை நேற்றிரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் அக்போகம பகுதியைச் சேர்ந்த ஈருவரையும், கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கந்தளாய்... Read more »
கடந்த 27 ம் திகதியிலிருந்து 28 ம் திகதி மதியம் வரை தமக்கு எரிபொருள் வழங்ககோரி பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தனியார் பேருந்துகளுக்கும் டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே மீண்டும் டீசல் விநியோகம் இன்றைய தினம்... Read more »
முஸ்லிம் மாணவிகளின் கலாச்சாரம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்று பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி யால் தாம் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ் பல்கலைக்கழக புதுமுக இரு முஸ்லிம்... Read more »