சங்கானையில் கிணற்றில் இருந்து வயோதிப பெண்மணியின் சடலம் மீட்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வீதி, சங்கானை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும் “நான் உங்களுக்கு தொந்தரவாக இருப்பதற்கு விரும்பவில்லை” என்றும் உறவினர்களுக்கு கூறியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட... Read more »

பிரதமரின் வீட்டுக்கு தீ வைப்பதற்கு தூண்டப்பட்டுள்ளது- பாலித்த ரங்கே பண்டார

பிரதமரின் தனிப்பட்ட வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், தனியார் ஊடகமொன்றும் அரசியல் கட்சியொன்றும் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய கருத்துப் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர். போராட்டத்தை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட... Read more »

மக்கள் போராட்டத்தால் ராஜபக்ஷர்களின் ஏகாதிபத்தியம் முடிவு – டில்வின் சில்வா

மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது மக்கள் போராட்டத்தை கணக்கில் எடுக்காது பதுங்குக்குழிக்குள் இருந்துகொண்டு பதவியை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து பின்கதவால் செல்ல நேர்ந்தது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்... Read more »

ஜனாதிபதியை வெளியேற்றும் அளவுக்கு மக்கள் போராட்டம் தீவிரம்- ஹரினி அமரசூரிய சூரிய

பதுங்குக்குழிக்குள் இருந்துகொண்டு மக்களை எதிர்கொள்ள முடியாதிருந்த ஜனாதிபதியை வெளியேற்றும் அளவுக்கு மக்கள் போராட்டமானது தீவிரத்தன்மையை அடைந்ததாகவும் இது உண்மையில் மக்கள் போராட்டத்துக்கான வெற்றியாகும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »

ஜனாதிபதி, 13 ஆம் திகதி பதவி விலகல் என்பது மற்றுமொரு சதி….! குமார் குணரட்னம்!

மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என முன்னிலை சோஷலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை இன்று நடாத்திய அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் யாருக்கு அதிகாரம் கிடைத்தாலும் போராட்டத்தின் எதிர்பார்ப்புகளுடன் சமரசம்... Read more »

ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பு….!

எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். சற்று முன்னர் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட சபாநாயகர்  மகிந்த யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஜூலை 13ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக... Read more »

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 27ஆவது நினைவு தினம்

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத்... Read more »

கோட்டாபயவின் பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்! கொழும்பில் இருந்து வரும் செய்தி.

கோட்டாபயவின் பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள்  தெரிவித்துள்ளனர்.  ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட... Read more »

ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட இலட்சக்கணக்கான பணம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து பெருந்தொகை பணத்தினை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களினால் அங்கிருந்து சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக... Read more »

ஊடகவியலாளர்களை கொடூரமாக தாக்கிய இராணுவத்தினர்: ரணில் வெளியிட்ட தகவல்.

 நடந்து வரும் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் கடும் வருத்தம் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் மிக முக்கியமானது. எந்தவொரு வன்முறையையும் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாதுகாப்புப் படையினரும்... Read more »