நல்லூர் கந்தன் கொடியேற்றம் (படங்கள் இணைப்பு)

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. காலை 9 மணி முதல் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி, காலை 10.00 மணிக்கு... Read more »

நாதன் அறக்கட்டளை நிறுவனத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்து பொருட்கள் அன்பளிப்பு!

எஸ் கே நாதன் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குனர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களினால் யாழ்ப்பாண போதனை வைத்தியசாலைக்கு தேவையான பல லட்சம் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்கள் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. Read more »

கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்யுமாறு வலியுறுத்தும் கனேடிய எம்.பி.

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைதுசெய்யப்படவேண்டும் என கனேடிய பழமைவாதக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியேர் பொய்லியேவ்ர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடொன்று... Read more »

வவுனியாவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் பெண் ஒருவர் காயம்!

வவுனியா ஈச்சங்குளம் சாலம்பன் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா கல்மடுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே காயமடைந்தவராவர். குறித்த பெண் தமது வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த போதே,... Read more »

அத்தியாவசிய ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கும் பணி மூன்றாவது நாளாக முன்னெடுப்பு.

அத்தியாவசிய ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கும் பணி மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த விநியோக நடவடிக்கை நேற்று முன்தினம் ஆரம்பமானது. இன்றையதினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில், விவசாயம் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், பிரதேச... Read more »

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி இரண்டாம் நாள் போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.   கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த ஊதிர வைரவர் ஆலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது,... Read more »

எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் மோதல்..! ஒருவர் காயம், கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் சம்பவம்.. |

யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்த பகுதியில் நேற்று இரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் காத்திருந்தவர்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. இதன்போது கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர்... Read more »

இலங்கைக்கு பெரும் சிக்கலாக மாறும் சீன கப்பல் விவகாரம்!

சீன கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இந்தியாவினால்,விரும்பத்தகாத அளவில் பார்க்கப்படுகிறது. எனவே கடந்த மாதங்களில் இருந்த அதே அளவு உற்சாகத்துடன் விரைந்து உதவிகளை வழங்க இந்தியா, எவ்வளவு உற்சாகமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று சர்வதேச ஊடகம்... Read more »

ஜனாதிபதி செயலகத்துக்குள் பிரவேசித்த முதல் ஆர்ப்பாட்டக்காரர் கைது!

ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்ததாக கூறப்படும் முதலாவது ஆர்ப்பாட்டக்காரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபர் நேற்று(01) விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால்... Read more »

கோட்டாபய தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம், எந்த சலுகையும், விருந்தோம்பலும் அளிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூர் வருகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு பாலகிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை... Read more »